UPDATED : பிப் 12, 2026 09:50 PM
ADDED : பிப் 12, 2026 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
முன்னாள் மாணவரின், ஒரு கோடி ரூபாய் நன்கொடையில், அண்ணா பல்கலையில் புதிதாக ஏ.ஐ., ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் இயங்கும், கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு இன்ஜினியரிங் துறையில், மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, வைதர்மா என்னும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகம் நேற்று திறக்கப்பட்டது.
கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில், 1990ம் ஆண்டு படித்த மாணவரும், கார்சன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான, சுந்தர் வைத்தியநாதன் வழங்கிய ஒரு கோடி ரூபாய் நன்கொடையில், இந்த ஏ.ஐ., அறிமுகம் துவங்கப்பட்டுள்ளது.

