sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொழில் நிறுவன பணியாளர்களுக்காக இன்ஜி., கல்லுாரிகளில் புதிய படிப்பு

/

தொழில் நிறுவன பணியாளர்களுக்காக இன்ஜி., கல்லுாரிகளில் புதிய படிப்பு

தொழில் நிறுவன பணியாளர்களுக்காக இன்ஜி., கல்லுாரிகளில் புதிய படிப்பு

தொழில் நிறுவன பணியாளர்களுக்காக இன்ஜி., கல்லுாரிகளில் புதிய படிப்பு


UPDATED : ஏப் 28, 2025 12:00 AM

ADDED : ஏப் 28, 2025 12:49 PM

Google News

UPDATED : ஏப் 28, 2025 12:00 AM ADDED : ஏப் 28, 2025 12:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்படும் என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

*மாபெரும் தமிழ்க்கனவுகள் என்ற பெயரில், 3 கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

* சீனாவின் ஷாங்காய் நகரில், 2026 செப்டம்பரில் நடக்கவுள்ள உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், 500 மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள், செய்முறை அனுபவங்கள், பயிற்சி திட்டங்கள், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்

* அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இண்டஸ்ட்ரி இன்ஸ்ட்யூஷன் இன்டர்ஸ்பேஸ் செல் எனும் தொழில் நிறுவன இடைமுகப் பிரிவு, 1.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்

* மாணவர்கள் அனுபவ ரீதியாக வெவ்வேறு அறிவியல் பரிசோதனைகளை செய்து பார்க்கும் வகையில், இரண்டு மாவட்ட தலைநகரங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டெம் ஆய்வகங்கள் அமைக்கப்படும் நடத்தப்படும்

* சென்னைக்கு அருகில், ட்ரோன் சான்றிதழ் வழங்கும் சிறப்பு பிரிவு, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us