UPDATED : நவ 23, 2025 10:32 AM
ADDED : நவ 23, 2025 10:33 AM
அபுஜா:
நைஜீரியாவில், கத்தோலிக்க கிறிஸ்துவ உறைவிட பள்ளி ஒன்றில், ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தியது.
இச்சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.
தேடுதல்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க கல்வி நிறுவனமான, செயி ன்ட் மேரீஸ் பள்ளியில் நே ற்று முன்தினம் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்களை கடத்திச் சென்றது.
எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்ற தகவல் முதலில் வெளியிடப்படவில்லை. பின்னர், 215 பேர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, 303 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருப்பதாக நைஜீரிய கிறிஸ்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்ட மாணவர்கள் 10 முதல் 18 வயதுடையோர் என்றும், இவ ர்களில் ஆண், பெண் இரு பாலரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட் க, ராணுவத்தினருடன் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மிரட்டல்
அண்டை மாகாணமான கெப்பியின் மகா நகரில், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நான்கு நாட்களுக்கு முன்னர் தான், இதேபோன்று ஒரு தாக்குதலை நடத்தி, அங்கிருந்த 25 மாணவியரை கடத்திச் சென்றது. இந்த கடத்தலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த சில ஆண்டு களாகவே, போக்கோ ஹராம் போன்ற பயங்கரவாதிகள், மாணவர்களை கடத்திச் சென்று, பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

