sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்.ஐ.டி., மாணவர்கள் சந்திப்பு: சென்னையில் லோகோ வெளியீடு

/

என்.ஐ.டி., மாணவர்கள் சந்திப்பு: சென்னையில் லோகோ வெளியீடு

என்.ஐ.டி., மாணவர்கள் சந்திப்பு: சென்னையில் லோகோ வெளியீடு

என்.ஐ.டி., மாணவர்கள் சந்திப்பு: சென்னையில் லோகோ வெளியீடு


UPDATED : டிச 31, 2024 12:00 AM

ADDED : டிச 31, 2024 10:51 AM

Google News

UPDATED : டிச 31, 2024 12:00 AM ADDED : டிச 31, 2024 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின், உலக முன்னாள் மாணவர் சந்திப்புக்கான, லோகோ வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

லோகோ வெளியிட்டு, அந்நிறுவனத்தின் இயக்குனர் அகிலா கூறியதாவது:


திருச்சி என்.ஐ.டி.,யின், உலக முன்னாள் மாணவர் சந்திப்பு - 2025 வரும், 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. என்.ஐ.டி.,யில் படித்த, 48,000க்கும் மேற்பட்ட மாணவர்களில், 900க்கும் அதிகமானோர், பல்வேறு நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர்; 1,300க்கும் மேற்பட்டோர், பல்வேறு நிறுவனங்களை துவங்கி உள்ளனர்.

இத்தகைய பெருமைமிக்க நிறுவனத்தின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதில், அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் சந்திப்பின் போது, திருச்சியில், 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, என்.ஐ.டி., ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை திறக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us