sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை; நிர்வாக இயக்குநர் உறுதி

/

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை; நிர்வாக இயக்குநர் உறுதி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை; நிர்வாக இயக்குநர் உறுதி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை; நிர்வாக இயக்குநர் உறுதி


UPDATED : ஆக 15, 2024 12:00 AM

ADDED : ஆக 15, 2024 03:49 PM

Google News

UPDATED : ஆக 15, 2024 12:00 AM ADDED : ஆக 15, 2024 03:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை என நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

மதுரை தோப்பூரில் மார்ச் 2024ல் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கியது. ஏற்கனவே தெரிவித்த படி கட்டுமானம் தொடங்கியதில் இருந்து 18 மாதங்களுக்குள் முதற்கட்டமாக மருத்துவக்கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகள் கட்டி முடிக்கப்படும். இப்பணிகளில் தாமதமோ சுணக்கமோ இல்லை. மத்திய அரசு நிதியுதவி, தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.

எய்ம்ஸ் மாணவர்கள் தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் பயில்கின்றனர். கல்விச் சூழலுக்காக நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விடுதியில் இடப்பற்றாக்குறையால் புதிய பேட்ச் மாணவர்கள் ராமநாதபும் தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்படுவர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 183 பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்பப்பட்டுள்ளன. கட்டுமானம் முழுமையடைந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் போது மீதிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us