UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 08:55 AM
சென்னை:
ஜெர்மனி நாட்டில், மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில், நர்ஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய, ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட, டிப்ளமா, பட்டப்படிப்பு முடித்த, ஆண் மற்றும் பெண் நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர்.
இவர்களுக்கு இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து, மாதச் சம்பளமாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
தகுதி உள்ளவர்கள், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், omclgerman2022@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களை, www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளம், 044 - 22505886/ 63791 79200 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.