sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒரு பணியாளர்; மூன்று மையங்கள் - அங்கன்வாடிகள் பரிதவிப்பு

/

ஒரு பணியாளர்; மூன்று மையங்கள் - அங்கன்வாடிகள் பரிதவிப்பு

ஒரு பணியாளர்; மூன்று மையங்கள் - அங்கன்வாடிகள் பரிதவிப்பு

ஒரு பணியாளர்; மூன்று மையங்கள் - அங்கன்வாடிகள் பரிதவிப்பு


UPDATED : டிச 16, 2025 10:15 AM

ADDED : டிச 16, 2025 10:18 AM

Google News

UPDATED : டிச 16, 2025 10:15 AM ADDED : டிச 16, 2025 10:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
' ஒரு அங்கன்வாடி பணியாளர் மூன்று மையங்களை கையாள முடியுமா, புதிய நியமனம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. சிரமத்தை உயர் அலுவலர்கள் புரிந்து கொள்வதில்லை,' என, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், 894 அங்கன்வாடி மையங்கள், 151 மினி அங்கன்வாடி மையம், பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்கள் சேர்த்து மொத்தம், 1,402 மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர் மட்டுமே உள்ளனர்.

காலை ஓரிடம் மதியம் வேறிடம்

இதனால், ஒரு பணியாளர் தான் பணிபுரியும் ஒரு மையம் மட்டுமின்றி, மேலும் இரண்டு மினி மையங்களை நிர்வாகிக்க வேண்டியுள்ளது. காலை ஓரிடம், மதியம் மற்றொருமிடமும் சென்று வருகின்றனர்.

உதவியாளர் இல்லாத, பெரிய மையங்களில், உதவிக்கு ஆட்கள் இல்லாததால், ஒரு பணியாளர், 25க்கும் அதிகமான குழந்தைகளை நிர்வகிக்க வேண்டியுள்ளது. மினி மையங்களில் உதவியாளர் என்ற பணியிடம் இதுவரை உருவாக்கப்படாததால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஒரிடத்தில் சரிவர பணிபுரிய முடியாத சிரமங்கள் ஏற்படுகிறது. ஏப்ரல் மாதத்துக்கு பின் பணியாளர், உதவியாளர் நேர்காணல் நடக்கவில்லை.

அக். இறுதி, நவ. துவக்கத்தில் சொற்ப அளவிலான உதவியாளர்கள் (50 - 80 பேர்) தேர்வு செய்யப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு அனுப்பபட்டனர். ஆனால், இன்னமும், 150க்கும் அதிகமான உதவியாளர் பணியிடங்கள் முழுமை பெறாமல் உள்ளது; 57 பணியாளர்கள் நியமிக்க வேண்டியுள்ளது.

பெயரளவுக்கு புதிய நியமனம்



ராமாத்தாள், மாவட்ட தலைவர், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்:

ஒரு அங்கன்வாடி பணியாளர் மூன்று மையங்களை கையாள முடியுமா, புதிய நியமனம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. சிரமத்தை உயர் அலுவலர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு போராட்டத்திலும் மையங்கள் மற்றும் குழந்தைகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவையான பணியாளர், உதவியாளர் நியமிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.






      Dinamalar
      Follow us