sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழுக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு

/

தமிழுக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு

தமிழுக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு

தமிழுக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு


UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM

ADDED : ஜூலை 11, 2024 08:01 AM

Google News

UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM ADDED : ஜூலை 11, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:
பல்லடம் அரசு கலை கல்லுாரியில், மாணவர் பேரவை துவக்க விழா நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி தலைவர் கவிதாமணி, சி.ஆர். கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி பேசியதாவது:


கற்களால் கட்டப்படுவது கட்டடம்; கோபுரங்களால் கட்டப்படுவது கோவில். அதுபோல், ஆசிரியர்களால் மாணவர்களால் கட்டப்படுவதே கல்விக்கூடம். உலகில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

ஆனால், தமிழ் மொழிக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு உள்ளது. அன்றைய காலத்தில் பெண்கள் பட்டப்படிப்பு படிப்பது என்பதே கானல் நீராக இருந்தது. அதையெல்லாம் உடைத்தெறிந்து இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஒரு பெண் படித்தால் அந்த சமுதாயமே மேம்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசு கல்லுாரி ஆண்டு மலரை, பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி வெளிட்டார்.






      Dinamalar
      Follow us