sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

/

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு


UPDATED : அக் 31, 2024 12:00 AM

ADDED : அக் 31, 2024 11:23 AM

Google News

UPDATED : அக் 31, 2024 12:00 AM ADDED : அக் 31, 2024 11:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்
: சிறுமுகை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் திறக்கப்பட்டன.

காரமடை ஊராட்சி ஒன்றியம், சிறுமுகை அருகே இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட, எஸ். புங்கம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 32.80 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன.

இதன் திறப்பு விழாவுக்கு இலுப்பநத்தம் ஊராட்சி தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை, கிருஷ்ணவேணி வரவேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். இந்த விழாவில் காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் ஸ்டெல்லா, பத்மா மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர். ஒப்பந்ததாரர் சரவணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us