sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நுாலகத்தை பராமரிக்க பணியாளர்களுக்கு உத்தரவு

/

நுாலகத்தை பராமரிக்க பணியாளர்களுக்கு உத்தரவு

நுாலகத்தை பராமரிக்க பணியாளர்களுக்கு உத்தரவு

நுாலகத்தை பராமரிக்க பணியாளர்களுக்கு உத்தரவு


UPDATED : மே 24, 2024 12:00 AM

ADDED : மே 24, 2024 11:43 AM

Google News

UPDATED : மே 24, 2024 12:00 AM ADDED : மே 24, 2024 11:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
நுாலகத்தை பராமரிக்க, பணியாளர்களுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மற்றும் மோகனுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், நேற்று கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

மோகனுார் பேரூராட்சியில், போட்டி தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டார். நுாலகத்தை சரியாக பயன்படுத்தி, அரசு தேர்வுகளில் வெற்றி பெற மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். நுாலகத்தை முறையாக பராமரிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மோகனுார் பேரூராட்சியில் சுகாதார நிலையம் அமைப்பதற்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மரூர்பட்டியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us