sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஓவியங்கள் பார்ப்போரை வியக்க வைக்கிறது

/

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஓவியங்கள் பார்ப்போரை வியக்க வைக்கிறது

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஓவியங்கள் பார்ப்போரை வியக்க வைக்கிறது

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஓவியங்கள் பார்ப்போரை வியக்க வைக்கிறது


UPDATED : ஜன 16, 2026 02:56 PM

ADDED : ஜன 16, 2026 02:58 PM

Google News

UPDATED : ஜன 16, 2026 02:56 PM ADDED : ஜன 16, 2026 02:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயிலில் நுாற்றாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பார்ப்போரை வியக்க வைக்கின்றன.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு பாத்தியமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருடன், அனுமன், ராமர் பட்டாபிஷேகம், மகாபாரத போர்க்கள கிருஷ்ணர் உபதேச காட்சி, பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் என மதுரை எல்.பி.ஏ., பாகவதரால் வரையப்பட்ட பழங்கால ஓவியங்கள் உள்ளன.

இதில் ஹைலைட்டாக இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாளுக்கு உரித்தான கள்ளழகர் திருக்கோலம் அப்போதே 3டி வடிவில் சுவற்றில் வரைந்துள்ளனர். இவை அனைத்தும் பரமக்குடி கருடா ஆர்ட் என்ற பெயரில் இயங்கி வரும் ஓவியர்கள் சண்முகநாதன் மற்றும் ரவி கை வண் ணத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

மேலும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப சுவாமி சிற்பங்களில் நகை வேலை பார்ப்பது போன்று வண்ண கற்களை பதித்து மேம் படுத்தி உள்ளனர். இதனால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைத்து ஓவியங்களையும் கண்டு மகிழ்வதுடன், அனைத்து புராண காட்சிகளையும் கண்முன் நிறுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன்படி கோயில்களில் ராஜகோபுரம் உட்பட அனைத்து வகையான வர்ண வேலைகளையும் செய்து வருவதாக ஓவியர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us