sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிறுவர்களை கடத்தியதாக தகவல் பள்ளியில் குவிந்த பெற்றோர்

/

சிறுவர்களை கடத்தியதாக தகவல் பள்ளியில் குவிந்த பெற்றோர்

சிறுவர்களை கடத்தியதாக தகவல் பள்ளியில் குவிந்த பெற்றோர்

சிறுவர்களை கடத்தியதாக தகவல் பள்ளியில் குவிந்த பெற்றோர்


UPDATED : மார் 22, 2025 12:00 AM

ADDED : மார் 22, 2025 09:58 AM

Google News

UPDATED : மார் 22, 2025 12:00 AM ADDED : மார் 22, 2025 09:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலகுண்டு:
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்த சிறுவர்களை சிலர் கடத்தி சென்றதாக தகவல் பரவியதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பெற்றோர் குவிந்தனர்.

இப்பள்ளியில் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவன் ஒருவரை டூவீலரில் வந்த சிலர் கடத்த முயன்றதாகவும் அவர்களிடமிருந்து மாணவர் தப்பித்து வந்ததாக தகவல் பரவியது.

இது போல் நேற்று காலையிலும் ஆம்னி வேனில் வந்த சிலர் மாணவர்களை கடத்த முயன்றதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் குவிந்தனர்.

பெற்றோர் கூறுகையில், கடத்தும் முயற்சியில் கும்பல் ஒன்று ஈடுபட்டதாக பிள்ளைகளிடம் விசாரித்தபோது தெரியவந்தது. கடத்தல் கும்பல் தொடர்பாக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதன் பின் பெற்றோர் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். கடத்தல் முயற்சி குறித்து நிலக்கோட்டை போலீசார், தாசில்தார் விஜயலட்சுமி விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us