sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி சந்தையை பார்வையிட்ட மக்கள்

/

கல்லுாரி சந்தையை பார்வையிட்ட மக்கள்

கல்லுாரி சந்தையை பார்வையிட்ட மக்கள்

கல்லுாரி சந்தையை பார்வையிட்ட மக்கள்


UPDATED : செப் 24, 2024 12:00 AM

ADDED : செப் 24, 2024 09:54 AM

Google News

UPDATED : செப் 24, 2024 12:00 AM ADDED : செப் 24, 2024 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கான கல்லுாரி சந்தை இரண்டு நாட்கள் நடந்தது.

உடுமலை அரசு கலைக்கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் கல்லுாரி சந்தை இரண்டு நாட்கள் நடந்தது. மகளிர் சுய உதவிக்குழுவினர், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த சந்தை நடந்தது. கல்லுாரி முதல்வர் கல்யாணி சந்தையை துவக்கி வைத்தார்.

திருப்பூர், திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் தயாரித்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தினர்.

அதில் கைவினைப்பொருட்கள், ஆபரணங்கள், சிறுதானிய உணவு பண்டங்கள், கைத்தறி சேலைகள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் இடம் பெற்றன. கல்லுாரி மாணவர்களும் தனியாக கடைகள் அமைத்திருந்தனர்.

இரண்டு நாட்கள் நடந்த சந்தையில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவி குழுவினர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களும் பங்கேற்றனர். மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் சந்தையை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us