மாணவர்களுக்கு கணித மாதிரி தேர்வு பெத்திசெமினார் பள்ளி முதலிடம்
மாணவர்களுக்கு கணித மாதிரி தேர்வு பெத்திசெமினார் பள்ளி முதலிடம்
UPDATED : பிப் 22, 2026 11:51 AM
ADDED : பிப் 22, 2026 11:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
புதுச்சேரி, கடலுார் மாவட்ட அளவில் நடந்த, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு கணித மாதிரி தேர்வில், பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சீனுவாச ராமானுஜர் கணித அகாடமி சார்பில், புதுச்சேரி, கடலுார் மாவட்ட அளவில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில், புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, முதலிடத்தை பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து, 9 ஆண்டுகளாக பங்கேற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கணித ஆசிரியர்களை பள்ளி முதல்வர் தேவதாஸ் பாராட்டினார்.

