sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிசியோதரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு

/

பிசியோதரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு

பிசியோதரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு

பிசியோதரபி படித்தவரின் 'கிளினிக்' 10 ஆண்டுக்குப்பின் 'சீல்' வைப்பு


UPDATED : ஆக 29, 2025 12:00 AM

ADDED : ஆக 29, 2025 08:26 AM

Google News

UPDATED : ஆக 29, 2025 12:00 AM ADDED : ஆக 29, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:
பட்டாபிராமில், பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கிளினிக்கிற்கு, மருத்துவத்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

ஆவடி அடுத்த பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 26ம் தேதி இரவு, வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில், தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது.

பட்டாபிராம், அணைக்கட்டுசேரியில் உள்ள எம்.என்.டி., கிளினிக் சென்று மருத்துவம் பார்த்துள்ளார். அங்கிருந்த ஞானாம்பாள் என்பவர், வலி நிவாரணி ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து அனுப்பியுள்ளார்.

வெங்கடேஷ், வீட்டுக்கு வந்தபோது, திடீரென அவருக்கு வயிற்று ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் தவறான மருந்து கொடுத்ததால், வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், ஞானாம்பாள் கிளினிக்கிற்கு சென்று கேட்டபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து, பட்டாபிராம் போலீசாருக்கும், மருத்துவ கவுன்சிலுக்கும் வெங்கடேஷ் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் அம்பிகா, கிளினிக்கிற்கு சென்ற விசாரணை நடத்தினார். ஞானாம்பாள், 47, என்பவர் பிசியோதெரபி படித்துவிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிளினிக்கிற்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us