UPDATED : மார் 27, 2025 12:00 AM
ADDED : மார் 27, 2025 11:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
கடந்த, 5ம் தேதி துவங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 485 மாணவர், 14 ஆயிரத்து, 752 மாணவியர் என, மொத்தம், 27 ஆயிரத்து, 237 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர். கடந்த, 5 ல், தமிழ், 10ம் தேதி ஆங்கிலத்தேர்வு நடந்தது; மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, கடந்த, 13ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது.
கடந்த, 24ம் தேதி, கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வுகள் நடக்கிறது. இன்றுடன் பிளஸ் 1 தேர்வுகள் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே, 19ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 11ம் தேதி துவங்க உள்ளது.