sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிகளில் காலஅட்டவணை தயாரிப்பு

/

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிகளில் காலஅட்டவணை தயாரிப்பு

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிகளில் காலஅட்டவணை தயாரிப்பு

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிகளில் காலஅட்டவணை தயாரிப்பு


UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM

ADDED : ஜூலை 02, 2024 10:15 AM

Google News

UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM ADDED : ஜூலை 02, 2024 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:
உயர் தொழில்நுட்ப ஆய்வகம் கொண்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அனைத்து வகுப்பு மாணவர்களும், ஸ்மார்ட் கிளாஸ் பாடப்பிரிவில் பங்கேற்க கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை உள்ளடக்கிய அரசு பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ைஹடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ெஹப்ரான் நிறுவனம் வாயிலாக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கல்வி உதவித் தொகை சார்ந்த பதிவுகள், மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, ஆசிரியர்கள் உதவியுடன் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதுடன், ஆன்லைன் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, அனைத்து வகுப்பு மாணவர்களும் 'ஸ்மார்ட் கிளாஸ்' பாடப்பிரிவில் பங்கேற்கும் வகையில், காலஅட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:



ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் அனைவரும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை தினமும் பயன்படுத்த வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், தினமும், 45 நிமிடம் புரொஜக்டர் வாயிலாக ஸ்மார்ட் கிளாஸ் பாடப்பிரிவைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

ஆய்வக பணியாளர்கள், ஒன்றிரண்டு பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, இத்தகைய பணியில் ஈடுபடுவர். இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும் காலஅட்டவணை தயாரிக்கப்பட்டு, தினமும் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us