sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு மருத்துவக்கல்லுாரி அட்மிஷனுக்கு தயாராகிறது

/

அரசு மருத்துவக்கல்லுாரி அட்மிஷனுக்கு தயாராகிறது

அரசு மருத்துவக்கல்லுாரி அட்மிஷனுக்கு தயாராகிறது

அரசு மருத்துவக்கல்லுாரி அட்மிஷனுக்கு தயாராகிறது


UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM

ADDED : ஜூன் 14, 2025 11:52 AM

Google News

UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM ADDED : ஜூன் 14, 2025 11:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுதும், மே 4ம் தேதி நடந்தது. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, மாணவர் சேர்க்கைக்கு தயாராகி வருகிறது.

கல்லுாரி நுழைவு வாயிலில், எம்.பி.பி.எஸ்., 100 இடங்கள்(நான்கரை ஆண்டு படிப்பு, ஒரு ஆண்டு கட்டாய மருத்துவ பயிற்சி); நர்சிங், டி.ஜி.என்.எம்., படிப்பு, 100 இடங்கள்(மூன்றாண்டு); டிப்ளமோ இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி; டிப்ளமோ இன் ரேடியோ டையக்னோசிஸ் டெக்னாலஜி தலா பத்து இடங்கள்(இரண்டு ஆண்டு; மூன்று மாதம் பயிற்சி) மற்றும் சான்றிதழ் படிப்பு குறித்த விபரம் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மே, 4ல் திருப்பூர் மாவட்டத்தில், ஏழு மையங்களில், நீட் தேர்வு நடந்தது. 3,105 பேர் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் தேர்வர்கள், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியை கவுன்சிலிங்கில் தேர்வு செய்யக்கூடும்; பார்வையிட வரக்கூடும் என்பதால், பெற்றோர் அறிந்து கொள்ள மருத்துவமனை நுழைவு வாயிலில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பத்மினி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us