sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஊட்டிக்கு வந்தார் ஜனாதிபதி முர்மு

/

ஊட்டிக்கு வந்தார் ஜனாதிபதி முர்மு

ஊட்டிக்கு வந்தார் ஜனாதிபதி முர்மு

ஊட்டிக்கு வந்தார் ஜனாதிபதி முர்மு


UPDATED : நவ 28, 2024 12:00 AM

ADDED : நவ 28, 2024 08:16 AM

Google News

UPDATED : நவ 28, 2024 12:00 AM ADDED : நவ 28, 2024 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, நேற்று ஊட்டி வந்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் இருந்து நேற்று காலை விமானத்தில் கோவை வந்து, காரில் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியே மதியம், 12:30 மணிக்கு, ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார்.

மாநில கவர்னர் ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர், அவரை வரவேற்றனர். குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் நாளை சந்திக்க உள்ளார். 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

ஹெலிகாப்டர் தவிர்ப்பு


டில்லியில் இருந்து விமானத்தில் கோவைக்கு வந்துள்ள ஜனாதிபதி, ஹெலிகாப்டரில் ஊட்டிக்கு வருவதாக இருந்தது. இதனால், ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் மற்றும் குன்னுார் ராணுவ ஹெலிபேடுகளை தயார்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, போலீசார் ஒத்திகையும் நடத்தினர்.

ஆனால், ஊட்டியில் நேற்று காலை மேக மூட்டம் நிலவியதால், ஹெலிகாப்டரில் வருவது தவிர்க்கப்பட்டு, சாலை மார்க்கமாக, ஜனாதிபதி காரில் ஊட்டி ராஜ் பவனுக்கு வந்தார்.






      Dinamalar
      Follow us