UPDATED : பிப் 19, 2026 05:25 PM
ADDED : பிப் 19, 2026 05:28 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20ம் தேதி) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மதியம், 01:00 மணி வரை நடக்கும் முகாமில், கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல், பிளஸ் 2, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை, 04343 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

