sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவனை அறைந்த தனியார் பள்ளி மேலாளர்

/

மாணவனை அறைந்த தனியார் பள்ளி மேலாளர்

மாணவனை அறைந்த தனியார் பள்ளி மேலாளர்

மாணவனை அறைந்த தனியார் பள்ளி மேலாளர்


UPDATED : ஆக 09, 2024 12:00 AM

ADDED : ஆக 09, 2024 10:23 AM

Google News

UPDATED : ஆக 09, 2024 12:00 AM ADDED : ஆக 09, 2024 10:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஜூரி காஸ்:
டில்லி பள்ளியின் மேலாளர் அறைந்ததில் 12 வயது சிறுவனுக்கு காதில் காயம் ஏற்பட்டது.

வடகிழக்கு டில்லியின் கஜூரி காஸ் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவனை, பள்ளியின் மேலாளர் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.

காதில் வலி இருப்பதாக சிறுவன் கூறியதால், பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மோசமான கையெழுத்திற்காக சிறுவனை பள்ளி மேலாளர் அடித்ததாக தெரிய வந்தது. கடந்த மாதம் 20ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து புகார் வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். எனினும் பள்ளி நிர்வாகத்துடன் சிறுவனின் பெற்றோர் சமரசம் செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us