UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
மாணவி கொடுத்த பாலியல் புகாரையடுத்து, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்கலையின் விசாரணைக் குழு, பேராசிரியரிடம் விசாரணையைத் துவக்கியுள்ளது.
புதுடில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் பி.ஏ., சமஸ்கிருதம் படிக்கும் மாணவி, பல்கலை நிர்வாகத்துக்கு இ - மெயில் வாயிலாக அனுப்பிய புகாரில், பேராசிரியர் தன்னை அலுவலக அறைக்குள் தகாத முறையில் நடந்து கொண்டார் என கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரிக்க பல்கலையின் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நிர்வாகம், பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.