sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 1ல் பெயிலான மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை

/

பிளஸ் 1ல் பெயிலான மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை

பிளஸ் 1ல் பெயிலான மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை

பிளஸ் 1ல் பெயிலான மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை


UPDATED : ஆக 11, 2025 12:00 AM

ADDED : ஆக 11, 2025 11:38 AM

Google News

UPDATED : ஆக 11, 2025 12:00 AM ADDED : ஆக 11, 2025 11:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் தராமல், பெயரளவுக்கு பாடங்களை நடத்தி விட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில், மாணவ, மாணவியரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியவில்லை என்ற தகவல் வெளியானது.

இதற்கு தீர்வு காண, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 2017 - 18ம் கல்வியாண்டில் இருந்து, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 8 லட்சத்து 7,098 மாணவ, மாணவியர் எழுதினர்.

துணைத்தேர்வு தேர்வு எழுதியவர்களில், 7.43 லட்சம் பேர், அதாவது, 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 63,866 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு, கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள், 31ல் வெளியாகின.

தற்போது, தமிழக அரசு சார்பில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. இந்த நடைமுறை இந்த கல்வியாண்டே அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டுகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநில கல்விக் கொள்கை அடிப்படையில், இந்த கல்வியாண்டு முதல், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அரசாணை இந்த அறிவிப்பு, 2025 - 26ம் கல்வியாண்டில், பிளஸ் 1 படிப்போருக்கு மட்டுமே பொருந்தும்.

கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 தேர்வெழுதி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள், பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணையாக வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us