புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
UPDATED : ஜூலை 23, 2026 03:59 AM
ADDED : ஜூலை 23, 2026 03:59 PM
புதுச்சேரி:
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ரமணீஷ்வர், நீட் தேர்வில் 646 மதிப்பெண்களுடன், அகில இந்திய அளவில் 1756வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நடப்பு 2026ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள், கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதிய 4716 பேரில் 2451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ரமணீஷ்வர், 646 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 1756வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், ஆதித்யா பள்ளி மாணவர்கள் இன்பஸ்ரீ - 633 (3073), பிரணவ் - 631(3397), விஷ்வகண்ணன் - 630 (3467), பிரீதம் - 630 (3464), ரோஷினி (எ) ரூபாவதி - 616 (5790), விஷ்வக்ஷனன் - 602 (9371) மற்றும் கைலாஷ் விஷ்வநாதன் - 600 (10161) இடங்களை பெற்றுள்ளனர்.
பள்ளியில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 550 முதல் 599 வரை 15 பேரும், 500 முதல் 545 வரை 10 பேரும், 475 முதல் 499 வரை 10 பேரும், 450 முதல் 474 வரை 16 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி, பள்ளி முதல்வர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.
போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பட்டய கணக்காளர் (நீட், ஜே.இ.இ., - மெயின்/அட்வான்ஸ்டு, ஜிப்மர், காமர்ஸ், சி.ஏ., பவுண்டேஷன், ஜூனியர் ஐ.ஏ.எஸ்.,) ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் ஆதித்யா பள்ளியில் நடத்தப்படுகிறது.
6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு ஆதித்யா கல்வி குழுமத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
