sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

67 மாணவ, மாணவியருக்கு ரூ.2.63 கோடி கல்விக்கடன்

/

67 மாணவ, மாணவியருக்கு ரூ.2.63 கோடி கல்விக்கடன்

67 மாணவ, மாணவியருக்கு ரூ.2.63 கோடி கல்விக்கடன்

67 மாணவ, மாணவியருக்கு ரூ.2.63 கோடி கல்விக்கடன்


UPDATED : அக் 11, 2024 12:00 AM

ADDED : அக் 11, 2024 11:15 AM

Google News

UPDATED : அக் 11, 2024 12:00 AM ADDED : அக் 11, 2024 11:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், மாணவ, மாணவியர் 67 பேருக்கு, ரூ.2.63 கோடி கல்விக்கடன் அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், கல்விக்கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில கடன் ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ், முன்னோடி வங்கி மேலாளர் துர்க பிரசாத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் என, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோருடன் முகாமில் பங்கேற்றனர்.

22 வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள், மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை பரிசீலித்தனர். மொத்தம் 300 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், உடனடியாக 67 பேருக்கு, ரூ.2.63 கோடி கல்விக்கடன் அனுமதி வழங்கப்பட்டது.

வித்யாலட்சுமி மற்றும் ஜன்சமர்த் இணையதளங்கள்வாயிலாக கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்; கல்விக்கடன் பெற மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us