sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சம்பளம் குறைப்பு அரசாணை; மறு நியமன ஆசிரியர்கள் எதிர்ப்பு

/

சம்பளம் குறைப்பு அரசாணை; மறு நியமன ஆசிரியர்கள் எதிர்ப்பு

சம்பளம் குறைப்பு அரசாணை; மறு நியமன ஆசிரியர்கள் எதிர்ப்பு

சம்பளம் குறைப்பு அரசாணை; மறு நியமன ஆசிரியர்கள் எதிர்ப்பு


UPDATED : நவ 14, 2024 12:00 AM

ADDED : நவ 14, 2024 12:50 PM

Google News

UPDATED : நவ 14, 2024 12:00 AM ADDED : நவ 14, 2024 12:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
ஓய்வுபெற்ற பின், மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

அதன் செயலர் பேட்ரிக் ரேமண்ட் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய, பட்டதாரி ஆசிரியர்கள், கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றால், கல்வியாண்டு முடியும் வரை, பணியை தொடர, மறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

கடந்த 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, புதிய பென்ஷன் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அவர்களுக்கு அவர்களின் கடைசி மாத சம்பளம் எவ்வளவோ, அதை அவர்கள் மறுநியமன காலம் முடியும் வரை வழங்க வேண்டும்.

ஆனால், கொரோனா காலத்தில் மறு நியமனம் செய்யப்பட்ட, அத்தியாவசிய பணியாளர்களுக்கான அரசாணை அடிப்படையில், சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்கின்றனர்.

ஆனால், அந்த அரசாணையில், ஆசிரியர் பணி குறிப்பிடப்படவில்லை. இதை தெளிவுபடுத்தி, நிதித்துறை செயலர், கருவூலக்கணக்கு கமிஷனர் உள்ளிட்டோருக்கு, சங்கம் சார்பில் கடிதம் எழுதி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us