sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்

/

பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்

பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்

பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்


UPDATED : ஜூலை 18, 2025 12:00 AM

ADDED : ஜூலை 18, 2025 08:09 AM

Google News

UPDATED : ஜூலை 18, 2025 12:00 AM ADDED : ஜூலை 18, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே திறந்து 3 மாதங்களே ஆன பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில், 6ம் வகுப்பு படித்து வரும் கோபிகா, தேன்மொழி, வைசாலி,கோகுல், ரஷித், ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த பள்ளிக் கட்டடம் திறந்து 3 மாதங்களே ஆகின்றன. ரூ.33 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடம், கடந்த ஏப்ரல் மாதம் தான் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளியின் தரம் குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கேள்வி எழுந்துள்ளது.

புதிய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசாரும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us