sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.ஐ.டி.,யில் அறிவியல் முகாம்

/

ஐ.ஐ.டி.,யில் அறிவியல் முகாம்

ஐ.ஐ.டி.,யில் அறிவியல் முகாம்

ஐ.ஐ.டி.,யில் அறிவியல் முகாம்


UPDATED : மே 22, 2025 12:00 AM

ADDED : மே 22, 2025 10:51 AM

Google News

UPDATED : மே 22, 2025 12:00 AM ADDED : மே 22, 2025 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:
பாலக்காடு ஐ.ஐ.டி., யில், பிளஸ் -1 மாணவர்களுக்கான அறிவியல் முகாம் துவங்கியது.

கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி., வளாகத்தில், இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் மாணவர் டீனாகவும் இருந்த முனைவர் வத்சகுமார் நினைவாக, பிளஸ்- 1 மாணவர்களுக்கான அறிவியல் முகாம் துவங்கியது.

வத்சாவுடன் பயணத்தை தொடருங்கள் என்ற தலைப்பில், 10 நாட்கள் நடக்கும் முகாமை, பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்திரி சேகர் துவக்கி வைத்தார்.

இந்திய விண்வெளி அறிவியல் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் பிரவீன் கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார். இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் உமா திவாகரன், பேராசிரியர் வத்சகுமார் குறித்து நினைவுரையாற்றினார். கணிதத் துறை உதவிப் பேராசிரியர் ரோஹித் வர்மா கலந்து கொண்டு பேசினார்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம், திறன் மற்றும் விமர்சன சிந்தனையை வளர்ப்பதே இந்த முகாமின் நோக்கம். மாணவர்கள், ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக இந்த முகாம் இருக்கும்.

அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான அமர்வுகள், சோதனை அமர்வுகள் மற்றும் புதிர்கள் ஆகியவையும் இந்த முகாமில் இடம் பெற்றுள்ளன, என, ஐ.ஐ.டி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us