UPDATED : ஜன 20, 2025 12:00 AM
ADDED : ஜன 20, 2025 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
அதில், பல்கலைக்கழக மானிய குழு வகுத துள்ள, புதிய வரை விதிகளும், அதன் தாக்கமும் என்ற தலைப்பில், எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் பேசினார். கருத்தரங்கில், மாவட்ட தலைவர் பாஸ்கரன், செயலாளர் ஜான் பாட்ஷா, இணை செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் தமிழரசி, மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.