sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை

/

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை


UPDATED : ஏப் 30, 2025 12:00 AM

ADDED : ஏப் 30, 2025 06:07 PM

Google News

UPDATED : ஏப் 30, 2025 12:00 AM ADDED : ஏப் 30, 2025 06:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறை பேராசிரியர்கள் மீது இளம் பெண் உதவி பேராசிரியர் கொடுத்த பாலியல் புகாரை விசாகா கமிட்டி குழு விசாரிக்க துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் முனைவர் பி.எச்டி பட்டம் பெறுவதற்காக பதிவு செய்தார். பின்னர் அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அந்த இளம் பெண் உதவி பேராசிரியர், அங்கு பணியாற்றும் இரு ஆண் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அவர் குற்றச்சாட்டுகளை கூறி புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இளம் பெண் உதவி பேராசிரியர் கொடுத்த பாலியல் புகாரை விசாகா கமிட்டி விசாரிக்க துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us