சத்துணவு ஊழியர்கள் பற்றாக்குறை ஒருவருக்கே கூடுதல் பணி; பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
சத்துணவு ஊழியர்கள் பற்றாக்குறை ஒருவருக்கே கூடுதல் பணி; பல ஆண்டுகளாக தொடரும் அவலம்
UPDATED : ஜன 18, 2025 12:00 AM
ADDED : ஜன 18, 2025 11:53 AM

சத்துணவு மையங்களில் உணவு சாப்பிடும் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவருக்கு தினமும் 100 கிராம் அரிசி, ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான வரை மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் சமையல் எண்ணெய், ஒரு முட்டை என கணக்கிட்டு உணவு வழங்கல் துறை மூலம் வழங்கப்படுகிறது.
ஒரு மாணவர் கணக்கில் எரிபொருள் செலவிற்கு 125 காசு, மளிகை பொருட்களுக்கு 46 காசு, காய்கறி செலவினத்திற்கு 5ம் வகுப்பு வரை 133 காசு, 6ம் வகுப்புக்கு மேல் 165 காசு என பணமாக அமைப்பாளரிடம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மையத்திற்கும் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட காலி இடங்களை நிரப்பாமல் உள்ளனர். இதனால் மாவட்ட அளவில் பாதி அளவிற்கு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
பல மையங்களில் ஒரு சமையலர் மட்டுமே அதிகாரப்பூர்வ ஊழியராக பணியில் இருக்கும் நிலை உள்ளது. ஒரு அமைப்பாளர் ஒன்று முதல் 5 மையங்கள் வரையிலும் கூடுதல் பொறுப்பாளராக பணியாற்றும் நிலை உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மாணவர் வருகை பதிவை பொறுத்தே செலவினம், பொருட்களின் அளவு இருக்கும் என்பதால் இதற்கான கணக்குகளை பராமரிப்பது சத்துணவு அமைப்பாளரின் முக்கிய பணி.
ஒரு அமைப்பாளர் பல மையங்களுக்கு செல்வதாலும், சில மையங்கள் அதிக துார இடைவெளியில் இருப்பதாலும் கூடுதல் போக்குவரத்து செலவு, உடல் சோர்வு ஏற்படுவதால் கடும் மன உளைச்சலில் உள்ளனர். காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.