sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்

/

ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்

ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்

ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்


UPDATED : ஜூலை 13, 2025 12:00 AM

ADDED : ஜூலை 13, 2025 08:28 AM

Google News

UPDATED : ஜூலை 13, 2025 12:00 AM ADDED : ஜூலை 13, 2025 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
ஜூலை 14ம் தேதி பூமி திரும்பியதும், இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஏழு நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள் ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு வரும் ஜூலை 14ம் தேதி அன்று இந்திய நேரப்படி மாலை 4:35 மணிக்கு சுபன்ஷுசுக்லா தலைமையிலான குழுவினர் பூமி திரும்புகின்றனர் என நாசா தெரிவித்துள்ளது.

க்ரூ டிராகன் விண்கலம் ஜூலை 15ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு கலிபோர்னியா கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரூ டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவரது உடலை சரிசெய்ய உதவும் வகையில், ஏழு நாட்கள் சுபன்ஷு சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

சுபன்ஷு சுக்லாவின் ரூ. 550 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணி, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண லட்சியங்களுக்கு, குறிப்பாக 2027ல் மேற்கொள்ளப்பட இருக்கும், ககன்யான் திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, சுபன்ஷு சுக்லாவின் உடல்நலம் மற்றும் உளவியல் தகுதியை இஸ்ரோவின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உன்னிப்பாகக் கண்காணித்தனர். அவர் பூமி திரும்பியதும் தீவிர மருத்துவ கண்காணிப்பு செய்ய ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us