sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி பேராசிரியரான மகன்

/

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி பேராசிரியரான மகன்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி பேராசிரியரான மகன்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி பேராசிரியரான மகன்


UPDATED : டிச 11, 2025 10:25 AM

ADDED : டிச 11, 2025 10:27 AM

Google News

UPDATED : டிச 11, 2025 10:25 AM ADDED : டிச 11, 2025 10:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
'கோலார் தங்கவயல் வரலாறு' நுாலின் இரண்டாம் பதிப்பு, பெங்களூரில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது.

தலைமை வகித்த கல்வியாளர் எம்.எஸ்.வின்சென்ட் பேசியதாவது:

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், புத்தக திருவிழாவை நடத்தி தமிழுக்கு உயிர் தரும் வேலையை செய்து வருகிறது. இவ்விழாவில், மகுடம் சூட்டும் வகையில் 'கோலார் தங்கவயல் வரலாற்று நுாலின் இரண்டாம் பதிப்பு' வெளியிடப்பட்டது பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் முதல் பதிப்பு நுால் வெளியீட்டு விழா 1989 ல் நடந்த போது முதல் வரிசையில் அமர்ந்தேன். தற்போது இரண்டாம் பதிப்பு நுால் வெளியீடு எனது தலைமையில் நடக்கிறது.

திருக்குறள் ஓலைச் சுவடி மூலம் தான் திருக்குறள் எழுதப் பட்டது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான், ஓலைச் சுவடி இருக்கும். எனவே அதனை படியெடுத்து மறுபதிப்பாக கொண்டு வந்தனர். இப்படி செய்ததால் தான் நமக்கு திருக்குறள் கிடைத்தது.

அது போல கோலார் தங்கவயல் வரலாற்று நுாலை கே.எஸ்.சீதாராமன் எழுதி வெளியிட்டார். அவர் மறைவுக்குப் பின், அதே நுாலை அவரின் மூத்த மகன் சந்திரசேகரன், இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்துள்ளார். மூன்றாம் பதிப்பு நுாலை சந்திரசேகரின் மகன் கொண்டு வரவேண்டும். நான்காவது பதிப்பை அவரின் மகன் வெளியிட வேண்டும்.

கோலார் தங்கவயல் வரலாறு எக்காலத்திற்கும் அறிய வேண்டிய நுால். தங்கச் சுரங்க வரலாறு மட்டுமல்ல. தமிழின் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என தமிழின் ஆளுமையை காணலாம். தங்கவயல் ஓ டானியேல் சாலையில் இருந்து மாரிகுப்பம் தென்னிந்திய பவுத்த சங்கம் வரை செல்லும் சாலைக்கு 'கோலார் தங்கவயல் நுால் ஆசிரியர் கே.எஸ்.சீதாராமன் பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உண்மை சம்பவம் நுாலை வெளியிட்ட ஆங்கில பேராசிரியர் சுப்பிரமணியம் பேசியதாவது:

தங்கவயல் வரலாற்றை துல்லியமாக வழங்கி இருக்கிறார். கே.ஜி.எப்., திரைப்படம் வரலாற்று சம்பவங்கள் இல்லை. அது ஒரு பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டது; பெருமையாக பேசப் பட்டது. ஆனால் உண்மை சம்பவத்தை ஆராய்ந்து பல்வேறு சம்பவங்களை வரலாறாக வழங்கி இருக்கிறார்.

நான் பி.யு.சி., வரை தமிழில் தான் படித்தேன். எனக்கு ஆங்கிலம் சவாலானது. எனது தந்தை தங்கச் சுரங்க கூலித் தொழிலாளி. அவர், என்னிடம், 'நான் தான் கூலியாக வேலை செய்தேன்.

என் மகன் ஒரு அதிகாரியாக இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதன் படி செயல்பட்டு ஆங்கிலத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றேன்; ஆங்கில பேராசிரியர் ஆனேன். ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கற்று தந்தேன்.

கவிஞர் கண்ணதாசன்

ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழ் இலக்கியமும் படித்தேன். கவிஞர் கண்ணதாசன், தான் எழுதிய கவிதைகளை, ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் ேஷக்ஸ்பியரை மிஞ்சியிருப்பார். உலகம் அறிய ஆங்கிலம் தேவைப்படுகிறது.

நான் உலகில் 30 நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். தங்கவயலின் மாணவர்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். வெளிநாடுகளில் பலரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தங்கவயல் வரலாறு உலகெங்கும் பரவ, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us