தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மீது தனி கவனம்
தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மீது தனி கவனம்
UPDATED : ஜன 25, 2026 09:58 AM
ADDED : ஜன 25, 2026 09:59 AM
தேனி: அரையாண்டுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த தலைமை ஆசிரியர்களிடம் சி.இ.ஓ., நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமை வகித்தார். இடைநிலைக் கல்வி டி.இ.ஓ., சுருளிவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், தேர்ச்சி பெறதவர்களை தேர்ச்சி பெற வைக்க தொடர் பயிற்சிகள் வழங்க வேண்டும். வகுப்புகளில் சிறப்பு தேர்வுகள் நடத்தி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த சி.இ.ஓ., வலியுறுத்தி உள்ளார் என்றனர்.

