sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரையாண்டு தேர்வு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

/

அரையாண்டு தேர்வு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

அரையாண்டு தேர்வு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

அரையாண்டு தேர்வு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த தடை


UPDATED : டிச 26, 2025 10:45 AM

ADDED : டிச 26, 2025 10:46 AM

Google News

UPDATED : டிச 26, 2025 10:45 AM ADDED : டிச 26, 2025 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:
அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:


பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அரையாண்டு விடுமுறை காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து உத்தரவு அனுப்பி உள்ளார். அதில், அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு டிச., 24 முதல் ஜன., 4 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜன., 5ம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்தும், அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை, விடுமுறை நாட்களில் அவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம்.

தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும், மேலும், பெரியோர்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும், குழந்தைகளை பழக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us