UPDATED : மே 05, 2026 06:40 PM
ADDED : மே 05, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
விழுதுகள் அமைப்பு சார்பில் திருப்பூரில் தொழிலாளர் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், திருப்பூர் சின்னால் நகரில் தொழிலாளர் தினம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. அமைப்பின் இயக்குனர் தங்கவேல் தலைமை வகித்தார்.
கள ஒருங்கிணைப்பாளர் அசோக் முன்னதாக வரவேற்றார். தொழிலாளர்களுக்கான சட்டரீதியான உரிமைகள் குறித்தும் தொழிலாளர்களுக்கான அரசு நலத் திட்டங்கள், பெண் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விளக்கப்பட்டது.
இதில் திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கள ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார்.
