sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளிகளுக்கு இலங்கை பிரதமர் 'விசிட்'

/

அரசு பள்ளிகளுக்கு இலங்கை பிரதமர் 'விசிட்'

அரசு பள்ளிகளுக்கு இலங்கை பிரதமர் 'விசிட்'

அரசு பள்ளிகளுக்கு இலங்கை பிரதமர் 'விசிட்'


UPDATED : அக் 18, 2025 10:14 AM

ADDED : அக் 18, 2025 10:15 AM

Google News

UPDATED : அக் 18, 2025 10:14 AM ADDED : அக் 18, 2025 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
அரசு முறைப் பயணமாக புதுடில்லி வந்துள்ள, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, ரோஹிணி சி.எம். ஸ்ரீ பள்ளியை நேற்று பார்வையிட்டார்.

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதுடில்லிக்கு நேற்று முன் தினம் வந்தார். புதுடில்லியில் தான் படித்த டில்லி பல்கலையின் ஹிந்து கல்லூரிக்கு நேற்று முன் தினம் வந்த அவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார்.

இந்நிலையில் நேற்று காலை, ரோஹிணியில் அமைந்துள்ள சி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு வந்தார். வகுப்பறைகள், உள்கட்டமைப்பு, கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். டில்லி அரசின் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்டவை குறித்து ஆஷிஷ் சூட் மற்றும் ஹரிணி ஆகியோர் விரிவாக விவாதித்தனர். அப்போது, டில்லி- - கொழும்பு கல்வி பாலம், மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், பள்ளி வடிவமைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசித்தனர்.

அதைத் தொடர்ந்து, சர்வோதயா இருபாலர் பள்ளியையும் ​அமரசூரியா பார்வையிட்டு, மாணவ - மாணவியருடன் உரையாடினார்.






      Dinamalar
      Follow us