sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை

/

பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை

பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை

பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசனை


UPDATED : நவ 15, 2024 12:00 AM

ADDED : நவ 15, 2024 12:58 PM

Google News

UPDATED : நவ 15, 2024 12:00 AM ADDED : நவ 15, 2024 12:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரம்நகர்:
டில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நகரின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:

காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் நாளை (இன்று) நிலைமை மாறக்கூடும். ஒருவேளை நிலைமை மோசமானால் இரண்டாம்கட்ட நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தும்.

குழந்தைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதால், கடந்த ஆண்டைப்போலவே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது. சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாசுபாட்டைக் குறைப்பதற்கான அனைத்து பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us