இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை
இளநிலை படிப்பிற்கான இடங்கள் மாணவர், பெற்றோர் சங்கம் கோரிக்கை
UPDATED : அக் 02, 2025 09:57 AM
ADDED : அக் 02, 2025 09:58 AM
புதுச்சேரி:
அரசு மருத்துவக் கல்லுாரியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை உயர்த்திட சுகாதாரத்துறை, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு;
ம த்திய அமைச்சரவை கூட்டத்தில், வரும் 2026-27 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லுாரிக்கு 550 மருத்துவ இடங்களை அதிகரித்து தரவும், புதிதாக மாநில மற்றும் மத்திய அரசால் துவங்கப்படும் மருத்துவ கல்லுாரிக்கு 5, 550 மருத்துவ இடங்களை உருவாக்க மத்தி ய அரசு முடிவு எடுத்துள்ளது.
அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கும் 6,000 இடங்களை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்கட்டமைப்பு வசதியும், போதிய பேராசிரியர்களும் உள்ளனர்.
ஆகையால், வரும் 2026-27 கல்வியாண்டில், பிரதமரின் மருத்துவ படிப்பில் புதிய திட்டத்தின்படி, அரசு மருத்துவ கல்லுாரியின் இடங்களை 180ல் இருந்து 250 ஆக உயர்த்த சுகாதாரத்துறை, கல்லுாரி நிர்வாகம் உரிய முயற்சிகள் எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.