UPDATED : ஆக 27, 2026 07:41 PM
ADDED : ஆக 27, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
கடலுார்:
கடலுார் துறைமுகம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் அணி தேர்வு நடந்தது.
பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, மாணவரணி தலைவர் மற்றும் வகுப்பு தலைவர்களை அங்கீகரித்து அதற்கான அடையாள வில்லைகளை வழங்கி பேசினார்.
பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். விழாவில், பள்ளி தாளாளர் கஸ்துாரி, நிறுவனர் சொக்கலிங்கம், பள்ளி நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி, நிர்வாக இயக்குனர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர் அணிகளின் அணிவகுப்பு நடந்தது.
