தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயிகளிடம் மாணவர்கள் தகவல் சேகரிப்பு

விவசாயிகளிடம் மாணவர்கள் தகவல் சேகரிப்பு

விவசாயிகளிடம் மாணவர்கள் தகவல் சேகரிப்பு


UPDATED : பிப் 11, 2026 04:46 PM

ADDED : பிப் 11, 2026 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 04:46 PM ADDED : பிப் 11, 2026 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
ஈரோடு மாவட்டம், பவானி, ஆப்பக்கூடல், குமரகுரு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை படிக்கும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தில், பெரியநாயக்கன்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் வேளாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்தனர்.

இவர்கள், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்குட்பட்ட சின்னதடாகம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், கூடலூர், நாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் தலா, 13 விவசாயிகளிடம் பயிர்கள், பயிரிடும் முறைகள், பயிர் மேலாண்மை, நீர் பாசனம், பயிர் பாதுகாப்பு, அறுவடை, வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us