UPDATED : மார் 12, 2026 06:34 PM
ADDED : மார் 12, 2026 06:35 PM
மந்தாரக்குப்பம்:
மாவட்டத்தில் தாலுகா வாரியாக கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு மையம் சார்பில் கோடை கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம்கள் பல்வேறு இடங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது.
கடலுார் மற்றும் நெய்வேலியில் நடைபெறும் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கைப்பந்து, கூடைபந்து, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
மேலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தாலுகா வாரியாக நடத்தப்பட்டால் தங்கள் திறமையை மேம்படுத்த வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாணவர்கள் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

