தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்

ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்

ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்


UPDATED : மார் 31, 2026 12:36 PM

ADDED : மார் 31, 2026 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2026 12:36 PM ADDED : மார் 31, 2026 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில் பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றவர்கள், துறை வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களுடன் பெற்றோரும் கவுரவிக்கப்பட்டனர்.

மாணவன் சுப்பிரமணியின் 'கரையாத காதல்', மாணவிகள் கீர்த்தனாவின் 'உரைக்காத வார்த்தைகள்', மீனாட்சியின் 'கவிதைகளும் கிறுக்கல்களும்', வைதேகியின் 'வைதேகி கவிதைகள்' ஆகிய கவிதை நுால்களை அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா வெளியிட்டனர்.

மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை விழாவில் அரங்கேற்றினர். கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us