இன்னும் உருவாகாத வேலைகளுக்கும் மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது
இன்னும் உருவாகாத வேலைகளுக்கும் மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது
UPDATED : பிப் 01, 2026 10:16 PM
ADDED : பிப் 01, 2026 10:17 PM
'பட்டம்' வினாடி - வினா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'ராஜலட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ்' நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி பேசியதாவது:
இந்த வினாடி - வினா போட்டி, பரிசு வெல்வதற்காகத் தானா என்பதை சிந்தித்தால், அதற்கானது மட்டுமல்ல; எதிர்காலத்துக்கானதும் தான். இன்றைய மாணவர்களின் காலம், மிக வேகமாக மாறும் காலம்.
தற்போது அனைவரும் செயற்கை நுண்ணறிவை பற்றி பேசுகின்றனர். அது, நம் பேச்சு, செயல், கல்வி, சிந்தனை, முடிவு என, அனைத்தையும் மாற்றி அமைக்கிறது.
அதனால், பல வேலைகள் பழையனவாகிவிட்டன; சில வேலைகள் மறைந்துவிட்டன. அதே நேரம், புதிய வேலைகள் உருவாகின்றன. இன்னும் உருவாகாத வேலைகளுக்காகவும் நாம் படிக்க வேண்டியுள்ளது.
அதை சார்ந்து, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், செமி கண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் வேகமாக ஓடுகின்றன. எதிர்காலத்தை எவராலும் கணிக்க முடியாது என்பது தான் உண்மை. அதற்கான கல்வியோ, சூழலோ கூட இன்னும் உருவாகவில்லை.
தினமும் மாறப்போகும் சூழலுக்கு ஏற்ப, மூளையை பலப்படுத்தும் வகையில், தொடர்ந்து கற்றுக்கொள்வது. அதாவது, சூழல் எதுவாக இருந்தாலும், அதற்கேற்ப நம்மை தகவமைப்பது, அதற்கான தன்னம்பிக்கையை உருவாக்குவது தான்.
அதாவது, எந்த சிக்கல்கள் வந்தாலும், அதற்கான தீர்வுகளை காண்பவராக, சிந்திப்பவராக மாற, இது போன்ற நிகழ்வுகள் உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.

