sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போதையின் பாதையில் மாணவர்கள் கடலுாரில் 'பகீர்'

/

போதையின் பாதையில் மாணவர்கள் கடலுாரில் 'பகீர்'

போதையின் பாதையில் மாணவர்கள் கடலுாரில் 'பகீர்'

போதையின் பாதையில் மாணவர்கள் கடலுாரில் 'பகீர்'


UPDATED : செப் 04, 2025 12:00 AM

ADDED : செப் 04, 2025 08:34 AM

Google News

UPDATED : செப் 04, 2025 12:00 AM ADDED : செப் 04, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:
போதைப்பழக்கம் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்துள்ள மிகப்பெரும் சவாலாக உள்ளது.

வயது வரம்பின்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் பரவியிருந்தாலும், இளம் தலைமுறையினரிடையே உருவாகும் போதைப்பழக்கம் அந்த சமூகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும்.

தமிழகத்தில் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே பரவியுள்ள போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரிலிருந்து முதுநகர் வரையிலான ரயில்வே பாதை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் வாலிபர்கள், பள்ளி மாணவர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரத்தில், மதுபோதையில் 17 வயது பள்ளி மாணவர் ஒருவர், தண்டவாளம் அருகே மயங்கிக் கிடந்தார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவரை எழுப்பி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்கு பின்னரே மாணவர் போதை தெளிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடலுாரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவர், அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருடன் மது அருந்தியதும், போதையில் மயங்கிக் கிடந்ததும் தெரிந்தது.

எனவே, பள்ளி அளவில் போதைப் பொருளுக்கு எதிரான குழுவை அமைத்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us