UPDATED : ஆக 22, 2025 12:00 AM
ADDED : ஆக 22, 2025 08:42 AM

சென்னை:
தமிழக அரசு தேர்வுத்துறை சார்பில் 2025-2026 கல்வியாண்டுக்கான “தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு” அக்., 11ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இதில் 50% இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பாடப்புத்தக்த்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் இயற்பியல்-2, உயிரியல், இயற்பியல்-6 (தொழிலாளர்), மற்றும் கணிதம்-7 (அகிலம்) என நான்கு தலைப்புகள் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் ஒரே நாளில் தேர்வு நடைபெறும். அரசு, தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என அறிவிக்கப்பட்டுள்ளது.

