UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 04:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக, தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக, தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது. என்.ஆர்.எப்., ரேங்க் பட்டியலில், 2024ம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நம் மாநிலம் மற்றவர்களை விட, மிகவும் முன்னோக்கி நிற்பதுடன், தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயித்துள்ளது.
நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு, இது ஒரு பெருமையான தருணம். நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தாய்ப்பான திட்டங்கள் வழியே, நம் மாணவர்கள் உயர்கல்வியில் மென்மேலும் புதிய உச்சங்களைத் தொடுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.