தமிழக அகழ்வாராய்ச்சி அறிக்கைகள்: மத்திய அரசு பதிலளிப்பு
தமிழக அகழ்வாராய்ச்சி அறிக்கைகள்: மத்திய அரசு பதிலளிப்பு
UPDATED : டிச 09, 2025 09:22 AM
ADDED : டிச 09, 2025 09:23 AM
சென்னை:
தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கமளித்தார்.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் கூறுகையில், தமிழ்நாட்டில் 2014 முதல் 2016 வரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்த வரைவு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்துள்ளதாகவும், 2018 முதல் தமிழக அரசு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி குறித்த இறுதி அறிக்கை இதுவரை பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் (2025 ஆகஸ்ட் வரை) தமிழக தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்ட 45 அகழ்வாராய்ச்சிகளின் மூலம் பல்வேறு கலாச்சார தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொல்லியல் ஆய்வு அலுவலர்களின் பணியிட மாற்றங்கள் வழக்கமான நிர்வாக நடவடிக்கையாக நடைபெறுவதாகவும், பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி தளங்கள் தொடர்பான சட்டம், விதிமுறைகளின் அடிப்படையில் மத்திய அரசு அறிக்கைகள் ஒப்புதல் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான போது மாநில தொல்லியல் துறை மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

