UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை பாரதியார் பல்கலையில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசுகையில், ''ஆசிரியர் - மாணவர் உறவு, தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு. ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாற ஆசிரியர்கள் இன்றியமையாதவர்கள், மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை விதைப்பவர்கள் ஆசிரியர்கள்,'' என்றார்.
பல்கலை பதிவாளர் ராஜவேல் வரவேற்றார். அறிவியல் பிரிவு டீன் பரிமேலழகன், தமிழ் துறை உதவி பேராசிரியர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

