sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருவாதுார் ஊராட்சியில் 2 புது அங்கன்வாடிகள் அமைக்க டெண்டர்

/

திருவாதுார் ஊராட்சியில் 2 புது அங்கன்வாடிகள் அமைக்க டெண்டர்

திருவாதுார் ஊராட்சியில் 2 புது அங்கன்வாடிகள் அமைக்க டெண்டர்

திருவாதுார் ஊராட்சியில் 2 புது அங்கன்வாடிகள் அமைக்க டெண்டர்


UPDATED : மே 01, 2025 12:00 AM

ADDED : மே 01, 2025 10:11 AM

Google News

UPDATED : மே 01, 2025 12:00 AM ADDED : மே 01, 2025 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:
பவுஞ்சூர் அருகே உள்ள திருவாதுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் 12 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயன்று வருகின்றனர். கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

இங்குள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது நாளடைவில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதேபோல, திருவாதுார் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திற்கும், புதிய கட்டடம் வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 2025 - 26 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், தலா 17.25 லட்சம் மதிப்பீட்டில், திருவாதுார் ஊராட்சியில் இரண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.

விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us